search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர்"

    பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #Parangimalai #trainaccident
    சென்னை:

    கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்த 5 பேர் ரெயில் பாதை இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்து உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து முதல் கட்ட தகவல்களை திரட்டினார். விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை லக்னோவில் உள்ள ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனரிடம் அவர் தாக்கல் செய்தார்.

    அதில் கே.ஏ.மனோகரன் கூறியிருப்பதாவது:-

    பரங்கிமலை ரெயில் நிலையத் தில் பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சரியில்லை. பயணிகள் பயணம் செய்த விதத்திலும் தவறு இருக்கிறது. இதனால் விபத்து நடந்துள்ளது. ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த பயணிகள், பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்தபோது மற்ற பயணிகளையும் பிடித்து இழுத்துள்ளனர்.

    இந்த ரெயிலில் 1,168 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், சம்பவத்தன்று சுமார் 2 ஆயிரத்து 200 பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்று ரெயில்வே வணிகத்துறை கணக்கிட்டு உள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதற்காக வேகம் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த காரணத்தால், இரண்டு ரெயில் பாதைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த விபத்து காரணமாக ரெயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பெட்டிகளில் மின் சாதனங்கள் சேதமடைந்த வகையில் ரூ.294 மட்டும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    விபத்துகளை தவிர்க்க பரிந்துரைகள்

    வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அவர் தெரிவித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-

    * கூட்ட நேரங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரெயில்களின் இருக்கைகள் கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல் நீளவாக்கில் அமைக்க வேண்டும்.

    * ரெயில் பாதைகளை கடப்பதாலும், ரெயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாலும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    * பிரதான ரெயில் நிலையங் களிலும், நடைபாதைகளிலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக் கவும், பயணிகள் ரெயில் பெட்டிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கவும் ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

    * படிகளில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடுமையாக்கப்பட வேண்டும்.

    * புறநகர் ரெயில்களில் தானாக கதவு மூடிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

    * விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உண்மையான பயணிகள். அவர்களின் பாதுகாப்பு ரெயில்வேயின் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    பரங்கிமலை ரெயில் நிலைய 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் உயரம், அகலம் குறைக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெறினார். #StThomasMountStation
    ஆலந்தூர்:

    பரங்கிமலை ரெயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் இன்று வந்தார்.

    சம்பவம் நடந்த 4-வது பிளாட்பாரத்தை ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணமாக கூறப்படும் பக்கவாட்டு சுவரை பார்த்தார். பின்னர் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழே சென்று 40 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில்வே அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை.

    பின்னர் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள டிவிசனல் கோட்ட அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி பரங்கிமலை ரெயில் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது.


    படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் தங்கள் முதுகில் பைகளை தொங்க விட்டுக் கொண்டு வந்தது தான் விபத்திற்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

    பீக்அவர்சில் ரெயில்கள் அதிகளவு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் அதிகப்பட்சமாக 12 பெட்டிகளை கொண்டு ரெயிலை இயக்குவதற்குதான் அனுமதி உள்ளது.

    கதவுகள் மூடப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பையில் தற்போது ஒரு சில ரெயில்கள் மூடப்பட்ட கதவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயில் வந்த வேகம் சரியானதுதான். ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று ரெயில் நிலையங்களிலும் பெட்டிகள் உள்ளேயும் ஒலிபெருக்கி, ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் மக்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் மிகக் குறைவு. ஆனால் அதனுடைய உயரம் மற்றும் அகலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது 4-வது பிளாட் பாரத்தில் சாதாரண மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிந்த பிறகு அறிவிக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

    மின்தடை காரணமாகத் தான் பிளாட்பாரத்தை மாற்றி நேற்று மின்சார ரெயில் இயக்கப்பட்டது. அதற்கு பயணிகள் காலதாமதத்தால் அவதிப்படக்கூடாது என்பதற்காக இயக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் தான் முழுமையான விவரங்கள் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    ×